தேவையான பொருட்கள்
வரகரிசி – ஒரு ஆழாக்கு
தண்ணீர் – இரண்டே கால் ஆழாக்கு
பொடி செய்ய:
காய்ந்த மிளகாய் – ஆறு
தனியா – இரண்டு கை
கடலை பருப்பு – ஒரு கை
துவரம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
கரிவேபில்லை – இரண்டு கை
உப்பு – தேவைகேற்ப
தாளிக்க:
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
வரகரிசி மற்றும் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி வேகவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
கடாயை சூடு செய்து காய்ந்த மிளகாய், தனியா, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கரிவேபில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து கோரகோரவென்று பொடி செய்து கொள்ளவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, அதில் தேவையான அளவு பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
பின், அதில் வரகரிசி சாதம் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.