465
தேவையான பொருட்கள்
எண்ணெய் – நான்கு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
முழு பூண்டு – இரண்டு
தக்காளி – மூன்று (நறுக்கி விழுதாக அரைத்தது)
சாதம் – இரண்டு கப்
கொத்தமல்லி – சிறிதளவு
பொடி செய்ய:
உளுத்தம் பருப்பு – ஒரு கை
காய்ந்த மிளகாய் – ஐந்து
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பூண்டை கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், அரைத்த பொடி சேர்த்து கிளறவும். பிறகு, சாதம் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.