தேவையான பொருட்கள்
எண்ணெய் – மூன்று தேகரண்டி
கடுகு – கால் டீஸ்பூன்
கடலை பருப்பு – கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
கரிவேபில்லை – சிறிதளவு
பெருங்காயம் – இரண்டு சிட்டிகை
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கத்தரிக்காய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை குடை மிளகாய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
வடித்த சாதம் – ஒன்றை கப்
பொடி செய்ய:
கசகசா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – மூன்று
தனியா – ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, பெருங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கத்தரிக்காய் நன்றாக சேர்த்து வதக்கவும்.
பின், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறவும்.
பின், அரைத்த பொடி இரண்டு டீஸ்பூன் சேர்த்து கிளறவும், வடித்த சாதம் ஆறவைத்து அதில் சேர்த்து மெதுவாக கிளறி கொத்தமல்லி துவி சூடாக பரிமாறவும்.