தோசை மற்றும் இட்லி க்கான ஒரு புதிய வகையான சட்னி.
தேவையான பொருட்கள்
கோஸ் – ஒரு கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
புலி – கால் எலுமிச்சை பழம் அளவு
உப்பு – தேவைகேற்ப
இஞ்சி – ஒரு சிறு துண்டு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கோஸ் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும்.
வறுத்த உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கோஸ் அதனுடன் புலி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.