351
தேவையான பொருட்கள்
தேங்காய் – இரண்டு
வெங்காயம் – இரண்டு
தக்காளி – மூன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் – பத்து
எண்ணெய் – ஐந்து டீஸ்பூன்
கடுகு – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
தேங்காயை உடைத்து துருவி அரைத்து முதல் பால் இரண்டு டம்ளர், இரண்டாம் பால் நான்கு டம்ளர் எடுத்து வைத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின், வெங்காயம், பச்சை மிளகாய், கரிவேபில்லை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், இரண்டாம் பால், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் முதல் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
நுரை வரும்போது இறக்கி விடவும்.