சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்து கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது.
Prep Time20 minutesmins
Cook Time20 minutesmins
Course: Main Course
Cuisine: South Indian
Ingredients
1/2கப் போன்லெஸ் மட்டன் கொத்து கறி
2பெரிய வெங்காயம்
1தக்காளி
4மேஜைக்கரண்டி தயிர்
1/4கப் துருவிய தேங்காய்
5பூண்டு பல்
2இஞ்சி துண்டு
2மேஜைக்கரண்டி சீராக தூள்
3மேஜைக்கரண்டி மல்லி தூள்
1/2மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
எண்ணெய்தேவையான அளவு
2துண்டு பட்டை
1நட்சத்திர பூ
1பிரியாணி இலை
1மேஜைக்கரண்டி சீரகம்
2ஏலக்காய்
3கிராம்பு
1மேஜைக்கரண்டி மிளகு தூள்
மிளகாய் தூள்தேவையான அளவு
1மேஜைக்கரண்டி கசகசா
1மேஜைக்கரண்டி கரம் மசாலா
4 to 5முந்திரி
நெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
1கை கொத்தமல்லி
Instructions
முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து, தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து மட்டன் கொத்து கறியை எடுத்து நன்கு கழுவி ஒரு bowl ல் போட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டிலிருந்து 2 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கிளறவும்.
பின்பு அதில் தயிர், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த ஊற வைத்து இருக்கும் கறியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சரியாக 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் பட்டை, நட்சத்திர பு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சீரகம் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்கு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறம் ஆனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டிலிருந்து ஒரு மேஜைக்கரண்டி சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டன் கொத்து கறியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
இது வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவு துருவி வைத்திருக்கும் தேங்காய், கசகசா மற்றும் முந்திரியைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு இந்த அரைத்த தேங்காயை கொதித்து கொண்டிருக்கும் கொத்து கறியில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
கொத்து கறி கிரேவியாக வேண்டும் என்றால் தண்ணீர் அதிகமாகவும் டிரை ஆக வேண்டும் என்றால் தண்ணீர் கம்மியாகும் சேர்க்கவும்.
3 நிமிடத்திற்கு பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் கொத்து கறியில் ஒரு மேஜைக்கரண்டி அளவு கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் ஒரு கையளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மட்டன் கொத்து கறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.