சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டு கொள்ள பல சைடிஷ்கள் இருந்தாலும் சென்னா மசாலாவின் இடத்தை நிரப்ப முடியாது.
Course: Side Dish
Cuisine: Indian, North Indian
Keyword: chana masala
Ingredients
1/4கப் கொண்டை கடலை
2பெரிய வெங்காயம்
2தக்காளி
1கப் துருவிய தேங்காய்
8 to 10முந்திரி
1பச்சை மிளகாய்
1துண்டு இஞ்சி
2பல் பூண்டு
1/2மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1மேஜைக்கரண்டி கரம் மசாலா
1மேஜைக்கரண்டி மல்லி தூள்
1மேஜைக்கரண்டி சீரக தூள்
மிளகாய் தூள்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
எண்ணெய்தேவையான அளவு
கொத்தமல்லிஒரு கை அளவு
கருவேப்பிலைஒரு கை அளவு
Instructions
கொண்டை கடலையை சுமார் 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (கொண்டை கடலையை செய்வதற்கு முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடவும்.)
முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி, இஞ்சி மற்றும் பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது துருவி வைத்திருக்கும் தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் முந்திரி மற்றும் பச்சை மிளகாய் போட்டு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதே ஜாரில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு பேஸ்ட் ஆக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் 50 கிராம் அளவு கொண்டை கடலையை அந்த ஜாரில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 4 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் கருவேப்பிலை மற்றும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை சேர்த்து கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை அப்படியே வைக்கவும். (கிரேவி திக்காக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.)
5 நிமிடத்திற்கு பிறகு கிரேவி நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் போது அதில் அரைத்து வைத்திருக்கும் கொண்டை கடலையை போட்டு நன்கு கலக்கி விடவும்.
அடுத்து ஊற வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டை கடலையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.
சென்னா மசாலாவை இறக்குவதற்கு முன் ஒரு கையளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சென்னா மசாலா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.