முதலில் வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், மற்றும் பட்டாணியை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் ரவையை போட்டு வறுத்து அடுப்பிலிருந்து இறக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். (ரவையை நிறம் மாறாமல் வறுப்பது அவசியம்.)
அடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலை, பட்டை, சோம்பு மற்றும் முந்திரியை போட்டு வதக்கவும்.
பின்பு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறுதளவு கருவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள பீன்ஸ், கேரட், மற்றும் பட்டாணியை இதனுடன் சேர்த்து சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடம் வதக்கிய பிறகு அதில் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அடுத்து அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும் அதில் மேலும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பின் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்றாக கட்டி தட்டாமல் கிளறி விடவும்.
தண்ணீர் வற்றும் வரை அதை வதக்கவும். தண்ணீர் வற்றியதும் அதில் ஒரு மேசைக்கரண்டி நெய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலே வைத்து சிறிது முந்திரிகளை அதன் மேலே தூவி பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான ரவா கிச்சடி தயார்.
இந்த சத்தான ரவா கிச்சடியை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.