ஒரு சுவையான தென்னிந்திய காலிஃபிளவர் கூட்டு. சூடான சாதம் உடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்
காளிப்பிளவர் – ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
வேகவைத்த கடலை பருப்பு – கால் கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கரிவேபில்லை – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – நான்கு
கரிவேபில்லை – சிறிதளவு
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து பவுடர் செய்து கொள்ளவும்.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின், காளிப்பிளவர் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த கடலை பருப்பு, மஞ்சள் தூள், கரிவேபில்லை, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வதக்கவும்.
பின், அரைத்த பொடி தூவி நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.