நவராத்திரி சிறப்பு சுண்டல் வகைகள்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – ஒரு கப் (அரை உப்பு போட்டு வேகவைத்தது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
பொடி செய்ய:
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
ஜாதிக்காய் – கால் டீஸ்பூன்
அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
கரிவேபில்லை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.
பிறகு, வேகவைத்த கடலை பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.
பின், பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.