
image from Jaya tv.
தேவையான பொருட்கள்
நாட்டு கோழி – கால் கிலோ
எண்ணெய் – ஒரு குழிகரண்டி
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
கரிவேபில்லை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – பதினைந்து
தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
துவரம் பருப்பு – கால் கப் (வேகவைத்தது)
மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் விழுது – நான்கு டீஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து, கோழி கறி, சீரக தூள் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின், வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து மிளகு தூள், கொத்தமல்லி தூவி கிளறி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.