தேவையான பொருட்கள்
மஷ்ரூம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
வேகவைத்த சென்னா – அரை கப்
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
சோம்பு – அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – ஒன்று
வெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
தக்காளி விழுது – கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
அரைக்க:
தேங்காய் துருவல் – நான்கு டீபஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
சின்ன வெங்காயம் – ஐந்து
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
பிறகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி விழுது, மஷ்ரூம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
ஐந்து நிமிடம் கழித்த பின், வேகவைத்த சென்னா மற்றும் அரைத்த விழுது சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கிளறி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.