தேவையான பொருட்கள்
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
பூண்டு – மூன்று பல் (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – மூன்று
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
எலுமிச்சை பழம் சாறு – இரண்டு சொட்டு
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விழுதாக அரைத்து கொள்ளவும். பிறகு, அதனுடன் உப்பு, எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.