Parboiled Rice
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – அரை கப்
வெல்லம் – கால் கப்
கடலை பருப்பு – இரண்டு தேகரண்டி
தேங்காய் துருவல் – இரண்டு தேகரண்டி
நெய் – இரண்டு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
கடலை பருப்பை வேகவைத்து கொள்ளவும்.
புழுங்கல் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து, வெண்ணெய் போல் அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
பிறகு, அதை கொதிக்கவிட்டு வைத்து கொள்ளவும்.
பின், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரைத்த அரிசி மாவை கொட்டி கிளறவும்.
மாவு நன்கு வெந்ததும் நெய், வேகவைத்த கடலை பருப்பு சேர்த்து கிளறவும்.
பின்பு, கொதிக்கவைத்த வெல்லம் தண்ணீர், தேங்காய் துருவல் கலவை சேர்த்து நன்றாக கெட்டியாக கிளறி இறக்கி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, அதில் இறக்கிய கலவை கொட்டி சமபடுத்தி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.