தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 5௦ கிராம்
காய்ந்த மிளகாய் – மூன்று
மஞ்சள் தூள் – சிறிதளவு
புளி – 1௦ கிராம்
சாம்பார் பொடி – ஒரு தேகரண்டி
துருவிய தேங்காய் – 25 கிராம்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைகேற்ப
சாம்பார் வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
ஒரு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதில் புளி, உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
பிறகு, சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
புளி தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து, நன்றாக கொதிக்கவிடவும்.
பிறகு, சாம்பார் பவுடர் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
Coconut Sambar Recipe in English