தேவையான பொருட்கள்
பீன்ஸ் – கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
வெங்காய தாள் – இரண்டு (பொடியாக நறுக்கியது)
கோதுமை மாவு – இரண்டு கப்
கரம் மசாலா – இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஐந்து தேகரண்டி
கடலை பருப்பு – ஐந்து தேகரண்டி
இட்லி மாவு – இரண்டு கரண்டி
மிளகாய் தூள் – இரண்டு தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
பீன்ஸ்யை ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், வெங்காயம், வெங்காய தாள் சேர்த்து நன்றாக வதக்கிய பின், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, தோசை மாவு சேர்த்து கலக்கவும்.
கோதுமை மாவுடன் இந்த கலவையை கொட்டி கிளறி தோசை மாவு பதத்திற்கு சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் தவாவை வைத்து மாவை அடை போல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.