405
தேவையான பொருட்கள்
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
வெங்காயம் – மூன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
குடைமிளகாய் – ஒரு கப் (நறுக்கியது)
அரைக்க:
முந்திரி – பத்து
கசகசா – கால் டீஸ்பூன்
பால் – அரை டம்ளர்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு, தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, குடைமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணிர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு, முந்திரி, கசகசா, பால் சேர்த்து அரைத்த விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கிளறி கொத்தமல்லி துவி இறக்கவும்.