தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்
உளுத்தம் பருப்பு – 5௦ கிராம்
வெந்தயம் – கால் தேகரண்டி
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் பால் – ஒரு கப்
சோடா மாவு – கால் தேகரண்டி
எண்ணெய் – 1௦௦ மில்லி லிட்டர்
செய்முறை
புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊறவைத்து நன்றாக மசிய அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து விடவும்.
பிறகு, தேங்காய் பால், உப்பு, சோடா மாவு ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும்.
வாணலியை சூடு செய்து ஒரு கரண்டி மாவை அதன் உட்புறம் ஊற்றவும்.
பின்பு, மாவு வாணலியின் ஓரத்தில் பரவும்படி வாணலியை மெதுவாக சுழற்றவும்.
ஆப்பம் நன்றாக மிருதுவாக வேகும்வரை மூடிவைக்கவும். (ஓரத்தில் தோசை போன்றும், நடுவில் இட்லி போன்று இருக்கும்.)
தேங்காய் பால் அல்லது பாயாவுடன் இதனை பரிமாறவும்.