தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்ட கடலை சென்னா (சுண்டல்) – 5௦ கிராம்
வெங்காயம் – 75 கிராம்
கொத்தமல்லி – அரை கொத்து
தனியா பவுடர் – அரை தேகரண்டி
தக்காளி – 75 கிராம்
சென்னா மசாலா பவுடர் – மூன்று தேகரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
கருப்பு உப்பு – ஒரு சிட்டிகை
சீரகம் – ஒரு தேகரண்டி
மிளகாய் தூள் – இரண்டு தேகரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
சாட் மசாலா பவுடர் – அரை தேகரண்டி
பட்டை, லவங்கம் – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேகரண்டி
செய்முறை
சென்னாவை எட்டு மணிநேரம் ஊறவைத்து கூக்கரில் வேகவைக்கவும்.
தக்காளி, வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும்.
இரண்டு தேகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும், பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும்.
மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த சுண்டல் சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக சேரும்வரை வறுக்கவும்.
சாட் மசாலா, சென்னா மசாலா பவுடர் மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.
பரிமாறும் போது ஒரு துண்டு எலுமிச்சைபழம் வைக்கவும்.
image via flickr: https://www.flickr.com/photos/hyderabadcateringservices/5586064947/