தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
வெங்காயம் – மூன்று (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தயிர் – இரண்டு டீஸ்பூன்
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
உப்பு – தேவைகேற்ப
குடைமிளகாய் – அரை கப் (நறுக்கியது)
தண்ணீர் இரண்டு கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது , கொதம்மல்லி, புதினா, மிளகாய் தூள், கரம் மசாலா, தயிர் ஆகியவற்றை ஒவ்ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின், தக்காளி, உப்பு சேர்த்து மூன்று நிமிடம் கழித்து குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து பாஸ்மதி அரிசி , தண்ணீர் ஊற்றி மேலே புதினா, கொத்தமல்லி, நெய் ஊற்றி மூடிவைக்கவும்.
ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும், மூன்று விசில் வந்தவுடன் எறக்கி சூடாக பரிமாறவும்.